Tharindu Withanage – SRI LANKA POLICE

Author name: Tharindu Withanage

Special Events - TA

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய குற்றம் இடம்பெற்ற இடத்தை சோதனை செய்யும் ஆய்வகம் திறப்பு.

ஒரு குற்ற சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கு ஆதாரங்களை திரட்டும் நோக்கில், பொலிஸ் அதிகாரிகள் சாட்சியங்களைச் சேகரித்து சந்தேகநபர்கள் குற்றவாளி என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இது கைரேகைகள், முடி மாதிரிகள், இரத்தம் போன்ற திரவங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப முறைகள் மூலம் சோதனை செய்யப்படும் சாட்சி (Scene Of Crime Officer (SOCO) ஆய்வகங்களில் சேகரிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் சிறப்பு பயிற்சியுள்ள SOCO அதிகாரிகள் குழு பணியில் ஈடுபட்டு, குற்றப்பிரிவுகளில் ஆய்வுகள் துல்லியமாக நடைபெறச் செய்கின்றனர். இந்த ஆய்வகங்களை மேலும் மேம்படுத்தி பிராந்திய அளவில் பயன்படுத்துவதன் மூலம் குற்ற விசாரணைகள் விரைவாக முடிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காக முக்கிய பகுதிகளில் புதிய சோதனை ஆய்வகங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, 2026.02.19 அன்று மான்குளம்   பொலிஸ் பிரிவில்  உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட குற்றப்பிரிவு சோதனை ஆய்வகம் புத்திக சிரிவர்தன அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது. கிளிநொச்சி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.என்.எஸ் மென்டிஸ் அவர்கள், முல்லைத்திவு பிரிவுக்குப் பொறுப்பாக சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் இரத்னவீர அவர்கள், குற்றப் பதிவுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குமார அவர்களும் சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டனர்.

Special Events - TA

வீதி விபத்துகளைத் தடுக்கும் திட்டங்களுக்கு உதவியளிக்கும் புதிய தரவு முறைமை.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வீதி விபத்துகளை ஆய்வு செய்து, அவற்றின் புள்ளிவிவரங்களை பயன்படுத்தி அப் பகுதியில் விபத்துகளை குறைக்கும் தீர்வுகளை உருவாக்குவது, விதிகளில் மனித உயிர்களை காப்பாற்றும் முயற்சிக்கு சிறந்த பலன்களை அளிக்கும். இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரப் பகுதிகளிலும் பதிவாகும் வீதி விபத்து தகவல்களை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பகுப்பாய்விற்கு அனுப்புவதற்காக, பொலிஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு மென்பொருள் பயன்பாட்டின் மூலம் புதிய தரவு முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 19.02.2026 அன்று கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மாநாட்டு மண்டபத்தில், இத்தரவு முறைமை முன்முயற்சி திட்டமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. முறைமையின் துல்லியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. முறைமையை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 142 டேப்லெட் சாதனங்களும், அவற்றிற்கான சிம் அட்டைகளும் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இத்தரவு முறைமை அறிமுக நிகழ்வில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்கள், குற்றவியல் மற்றும் போக்குவரத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு அவர்கள், கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சில்வா அவர்கள், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பாளர்கள், பொலிஸ் பிரிவுகளிலுள்ள போக்குவரத்து பொறுப்பாளர்கள் மற்றும் நகர போக்குவரத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Special Events - TA

ஊவா மாகாணத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான ஒழிப்பு விசேட நடவடிக்கைகள் ஆரம்பம்.

ஊவா மாகாணம் முழுவதும் பரவி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை திட்டத்தின் ஆரம்ப விழா 2026 பெப்ரவரி 14 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், மொனராகலை மாவட்டத்திற்குப் பொறுப்பான தனமல்வில பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனரத்ன அவர்கள், பதுளை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.என். லக்ஸிரி அவர்கள், மொணராகலை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அவர்கள், மொனராகலை மற்றும் பதுளை பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தனமல்வில பிரதேச செயலாளர், மாவட்ட மருத்துவ அதிகாரி, மொனராகலைப் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இச்சிறப்பு நடவடிக்கையின் மூலம் இலங்கை பொலிஸ், ஊவா மாகாண இளைஞர் சமூகத்தை போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாத்து, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்க எதிர்பார்க்கிறது.

Special Events - TA

திறனான பொதுமக்கள் சேவைக்காக ரூபாய் 556 மில்லியன் பெறுமதியுடைய புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிசுக்கு வழங்கப்பட்டது

நவீன தொழில்நுட்பமும் உட்கட்டமைப்பு வளங்களும் மூலம் பொலிஸின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக ரூபாய் 556 மில்லியன் பெறுமதியுடைய தொழில்நுட்ப உபகரணங்கள் தொகுப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள் 2026.02.18 அன்று பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களிடம் வழங்கினார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, பொலிஸ்மா அதிபர் குறித்த உபகரணத் தொகுப்பை அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். இவ் உபகரணத் தொகுப்பில் ரூ. 365 மில்லியன் பெறுமதியுடைய 1,718 கணினிகள், ரூ. 129 மில்லியன் பெறுமதியுடைய 575 நகல் எடுக்கும் இயந்திரங்கள், ரூ. 45 மில்லியன் பெறுமதியுடைய வேகமானி கருவிகள் மற்றும் ரூ. 17 மில்லியன் பெறுமதியுடைய 1,750 யூ.பி.எஸ். (UPS) கருவிகள் அடங்குகின்றன. பெரும் பணிச்சுமையுடன் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இலகுவாக்குவது இத்தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதன் பிரதான நோக்கமாகும். சமீப காலங்களில் பொலிசுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பெறுமதியுடைய உபகரணத் தொகுப்பாக இதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன அவர்கள், அமைச்சின் ஒருங்கிணைப்புப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த அமரதுங்க அவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Notable Services - TA

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் “ரூ சிரி” அழகு நிலையம் திறப்பு.

பொலிஸ்மா அதிபரின் மனைவியும், சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான நில்மினி சமரதுங்க மகளிரின் முயற்சியின் அடிப்படையில், முன்னர் கொழும்பு பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திலும் மற்றும் பாராளுமன்ற வர்த்தக வளாகத்திலும் “ரூ சிரி” என்ற பெயரில் நிறுவப்பட்டிருந்த அழகுக்கூட சேவையை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, அனுராதபுரம் பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அழகுக்கூடம் 2026.02.07 அன்று திறந்து வைக்கப்பட்டது. பொது மக்களை தங்களது பிரச்சினைகளை முன்வைக்க பொலிஸ் நிலையங்களுக்கு வர ஊக்குவிப்பதையும், பொலிஸ் நிலையங்களை பெண்களுக்கு மேலும் நெருக்கமாக மாற்றுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, மிகச் சலுகை விலையில் இந்த அழகுக்கூடத்தின் மூலம் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அழகுக்கலைத் துறையில் திறமை பெற்றுள்ள பொலிஸ் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்க இது உதவுகின்றது. சேவை வனிதையர் பிரிவு தலைவி சட்டத்தரணி நில்மினி சமரதுங்க அவர்களின் தலைமையில், அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான  சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர்  திலின ஹேவா பதிரண அவர்கள், அனுராதபுரம் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (I) பிரபாத் விதானகே உள்ளிட்ட அனுராதபுரம் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீர, அனுராதபுரம் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஷ்யாமலி திசாநாயக்க, பொலிஸ் சேவை வனிதையர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பத்மினி ஜயவீர ஆகியோரின் கலந்துகொள்ளுதலுடன் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

Special Events - TA

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் தொகுதி அழிப்பதற்காக வனாத்தவில்லுவ எரியூட்டி உலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடற்படையின் உதவியுடன் 2021.09.07 அன்று கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சுமார் 170 கிலோ கிராம் மொத்த எடையுடைய போதைப்பொருள் தொகுதியின் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவற்றை அழிப்பதற்காக குறித்த தொகுதி 2026.01.02 அன்று இன்று காலை வனாத்தவில்லுவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள எரியூட்டி உலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலதிக பரிசோதனைகளின் மூலம் தெரியவந்ததன்படி, குறித்த தொகுதியில் தூய எடையாக ஹெரோயின் 106 கிலோ கிராம் 248 கிராம் மற்றும் அபீன் போதைப்பொருள் 90.5 கிராம் உள்ளடங்கியுள்ளது. 2026.01.02 அன்று இன்று காலை சுமார் 06.00 மணியளவில், கொழும்பு மதிப்பிற்குரிய நீதவான் நீதிமன்றத்திலிருந்து இப் போதைப்பொருள் தொகுதி பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டு, பொலிஸ் விசேட அதிரடிப் பணிப்படை உள்ளிட்ட விசேட பொலிஸ் பாதுகாப்புடன் போக்குவரத்து செய்யப்பட்டது. போதைப்பொருள் தொகுதியை பொறுப்பேற்கும் நடவடிக்கையை மேற்பார்வை செய்வதற்காக, பொலிஸ் போதைப்பொருள் பணியகப் பிராந்தியத்திற்கு பொறுப்பிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன அவர்கள், அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் அதிகாரிகள், அரச இரசாயனப் பகுப்பாய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.

Special Events - TA

இலங்கை பொலிஸ் படையணிக்கு மலர்ந்த 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்.

2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வை முன்னிட்டு, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் ஜனவரி முதலாம் திகதி காலை பொலிஸ் தலைமையக வளாகத்தில் ஒன்றிணைந்து, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரசுச் சேவைக்கான சத்தியப்பிரமாணம் / உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அந்நிகழ்வின் போது, பொலிஸ்மா அதிபர் அவர்கள் இணையவழி (Online) மூலம் நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளின் அரச உத்தியோகத்தர்களாக பொதுமக்கள் நட்பு கொண்ட சேவையை உறுதியுடன் முன்னெடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான சூழலை பேணுவதற்காக பாராட்டத்தக்க முறையில் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவும் அறிவுறுத்தினார். தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களை நினைவுகூர்ந்த பின்னர், பாரம்பரிய முறையில் பால் சாதம் மற்றும் இனிப்புகளுடன் கூடிய தேநீர் விருந்தோம்பல் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அனைத்து அதிகாரிகளின் நலனுக்காக நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ்மா அதிபர் அவர்கள் விளக்கமளித்து, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிர்வாகப் பொறுப்பிலுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன அவர்கள், மேல் மாகாணப் பொறுப்பிலுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்கள் உள்ளிட்ட இலங்கை பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், அதேபோல் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபருக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Special Events - TA

சர்வராத்திரி பிரித் பாராயணத்துடன் இணைந்து நடத்தப்பட்ட காலை உணவுத் தானப் புண்ணிய நிகழ்வு.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி, பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வராத்திரி பிரித் பாராயணப் புண்ணிய நிகழ்வின் தொடர்ச்சியாக, அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை, பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், சிரேஷ்ப் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், இருபத்தைந்து தேரர்களுக்கான காலை உணவுத் தானத்தை புனிதமாக அர்ப்பணிக்கும் பொருட்டு, ஹுனுபிட்டிய கங்காராம விகாரத்திற்குப் புனிதமாக வருகை தந்தனர். அவ்வேளையில், ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி, பூஜ்ய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அவர்களின் தலைமையிலான மகா சங்கரத்தினர், பொலிஸ்மா தலைவர் உட்பட, இலங்கை பொலிஸ் துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து  உத்தியோகத்தர்களுக்கும் (ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட), 2025 ஆம் ஆண்டிற்கான சுகநலம், சாந்தி மற்றும் நலவாழ்வை மனமார்ந்த பிரார்த்தனையுடன் வேண்டி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

Special Events - TA

வரவிருக்கும் 2026 புத்தாண்டின் ஆசிர்வாதம்.

2026 புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும், அனைத்து பொதுமக்களான உங்களின் நலனுக்கும் பிரார்த்தித்தவாறு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி, பொலிஸ் தலைமையகத்தில் முழு இரவு பௌத்த பூஜைகள் நடைபெற்றது. லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு யானை ஊர்வலம் மற்றும் பொலிஸ் கலாச்சாரப் பிரிவின் சங்கீத நடனங்களைக் கொண்ட அழகிய பெரஹெர ஊர்வலம், பௌத்த தேரர்களின் விசேட பூஜையுடன் தொடங்கியது.  அனைத்து நடவடிக்கைகளும், பொலிஸ்மா தலைவர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையிலும், இலங்கை பொலிஸ் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. மேலும், இவ்விழாவிற்கு அழைப்பை ஏற்று வருகை தந்தோர்: • கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் துணை அமைச்சர் சுனில் வட்டகல அவர்கள், • பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அவர்கள், • நிர்வாகப் பொறுப்புக்கான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா தலைவர் சஞ்ஜீவ தர்மரத்ன • சிரேஷ்ட மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்  அனைவரும் இவ் விசேட பூஜையில் கலந்து கொண்டு ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.

Scroll to Top