Special Events – TA – Page 3 – SRI LANKA POLICE

Special Events – TA

Special Events - TA

இலங்கை பொலிஸ் தலைமையகக் கட்டடத் தொகுதி உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதியிலிருந்து கொம்பனிவீதியிலுள்ள 03 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காணியில் அமைந்த 12 மாடிக் கட்டடம் பொலிஸ் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி (இன்று) காலை,  இலங்கை பொலிஸ்துறைக்கு புதிய தலைமையகம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது இலங்கை பொலிஸ் தினமான 2025.09.03 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டதுடன்,  இலங்கை பொலிஸ் துறையின் வரலாற்றில் ஒரு தனித்துவமான தருணமாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வின் போது சர்வமத ஆசிகளைப் பெற்ற பின்னர், அமைச்சர் புதிய பொலிஸ் தலைமையகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து , பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Special Events - TA

“சட்டத்தை பேணுவோம், சமாதானத்தைப் போற்றுவோம்” கீழ்  159 ஆவது பொலிஸ் தினம்.

ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு நீண்ட வரலாற்றுக்கு உரிமையுடைய இலங்கை பொலிஸ் 2025 செப்தெம்பர் 03 ஆம் திகதியன்று 159 ஆவது பொலிஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றது. 1866 செப்தெம்பர் 03 ஆம் திகதியன்று ஶ்ரீமத் ஜீ.டப்ள்யூ.ஆர் கெம்பல் அவர்கள் அரசியலமைப்பின் படி இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்ற தினமே பொலிஸ் தினமாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பொலிஸ்மா அதிபரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களில் 159 ஆவது பொலிஸ் தினம் கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகவே கருதப்படுகின்றது. பொலிஸ் கடமைக்கு சமமான கடமைகள் நமது நாட்டில் மன்னராட்சி காலத்தில் இடம்பெற்றதாக வரலாற்று சான்றுகள் நினைவுக்கூறுகின்றன. அரசாட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் இந் நாட்டை ஆக்கரமித்த போது பொலிஸ் கடமைகள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பதை பொலிஸ் வரலாற்றை அராய்ந்துப் பார்த்தால் பன்டைய தகவல்கள் மூலம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.  எவ்வாறாயினும், 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்கள் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியப் பின்னர் 1650 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினால் இரவு நேர நகரப் பாதுகாப்புக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை  நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரத்தில் நகர ரோந்து நடவடிக்கைக்காக சிப்பாய்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர். இதுவே இலங்கையின் முதலாவது பொலிஸ் கடமையாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஒல்லாந்தர் பிரித்தானியரிடம் சரணடைந்த பின்னர் அன்றிலிருந்து பிரித்தானிய இராணுவத்தினரால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டது. பொலிஸ் மேற்பார்வைக்காகவும் மேலதிகப் பணிக்காகவும் அரச நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அப்போதைய ஆளுநரான பிறெட்ரிக் நோர்த் அவர்கள் பிரதம நீதியரசர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று பொலிஸ் மேற்பார்வை செய்யும் பொறுப்பை நீதவான் மற்றும் பொலிஸ் நீதியரசர்களிடம் ஒப்படைத்தார். இலங்கையை கைப்பற்றிய சிறிது காலத்திலேயே பொலிஸ் தொடர்பான சட்டம் முதன் முறையாக பிரித்தானியர்களால் நிறைவேற்றப்பட்டது.   மேலும்  கிராமப் பொலிஸ் என்று பெயரிடப்பட்டு 1806 ஆம் ஆண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகளையும் நியமித்து அவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என கட்டளையிடப்பட்டது. தங்கள் பொறுப்பிலுள்ள பிரதேசங்களில் சமாதானத்தை நிலைநாட்டி குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. மேலும், 1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தை திருத்தியமைத்ததன் பின்னர் பொலிஸ் படையணித் தலைவரின் பதவிநிலையான பிரதான பொலிஸ் அத்தியட்சகர் என்ற பதவிநிலைக்கு நியமிப்பதற்காகவும் நாடளாவியரீதியில் பொலிஸ் துறையை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் ஆற்றல்மிக்க நபர் ஒருவரை தேடிய ஆளுநர் பிறெட்ரிக் நோர்த் அவர்கள் இந்தியாவில் பொலிசார் கடமையாற்றும்  முறைமையையும் கண்காணித்தார். மும்பாய் பொலிசில் “இரத்னகிரி ரேஞ்சர்ஸ்” பொறுப்பில் இருந்த ஶ்ரீமத் ஜீ.டபிள்யூ.ஆர் கெம்பல் அவர்களிடம் இப் பொறுப்பை ஒப்படைக்குமாறு மும்பாய் ஆளுநர் அவர்கள் பரிந்துரை செய்தார். ஆளுநர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீ.டபிள்யூ.ஆர் கெம்பல் அவர்கள் பிரதான பொலிஸ் அத்தியட்சகராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன் பின்னர் 1866 ஆம் ஆண்டு செப்தெம்பர் 03 ஆந் திகதியன்று அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு பிரதான பொலிஸ் அத்தியட்சகர் என்ற பதவிநிலையை பொலிஸ்மா அதிபர் எனப் பெயர் மாற்றப்பட்டது. அன்றைய தினமே பொலிஸ் தினமாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. 1843 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருந்த பொலிஸ் கட்டளைச் சட்டத்தை இரத்து செய்த பின்னர் நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்காக ஆளுநர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு,  பொலிஸ் பரிசோதகர் பதவிநிலையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டதுடன், பொலிஸ் பியோன் (சேவகன்) பதவிநிலையை இரத்து செய்து பொலிஸ் கான்ஸ்டபிள் என்ற பதவிநிலையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1870 ஆம் ஆண்டில் அதிகளவிலான வணிகக் குற்றங்கள், மர்மக் கொலைகள் மற்றும் பல குற்றங்களின் இரகசியங்களை கண்டறியும் நோக்கத்துடன் சிவில் உடையுடன் கண்காணிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தினர். 1891 ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபர் பதவியை பொறுப்பேற்ற மேஜர் நோலிஸ் அவர்களால்  குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) ஆரம்பிக்கப்பட்டது. அத் திணைக்களத்தின் முதலாவது பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் கொத்தலாவல அவர்கள் பொலிஸ்மா அதிபர் அவர்களால் நியமிக்கப்பட்டார். இலங்கை பிரஜையான ஶ்ரீமத் றிச்சட் அலுவிஹாரை அவர்கள் பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற முதலாவது சந்தர்ப்பமாக கருதப்படுவதுடன்,  அவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதியன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய காலத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதுடன் பொலிஸ் படையணி அதன் காலணித்துவத்திலிருந்து தேசிய பொலிஸ் துறையாக விரிவுப்படுத்துவதற்கான பாரிய பொறுப்பு ஶ்ரீமத் றிச்சட் அலுவிஹாரை அவர்களுக்கு சுமத்தப்பட்டது. அதன் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்புரிகள், விசாரணைகள், குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்புச் சங்கங்கள், கிராமிய தன்னார்வுச் சேவை, பொதுமக்கள் நற்புறவு மற்றும் புதிய பயிற்சி விதிமுறைகள் ஆகிய நலன்புரிகளை மேம்படுத்துதல் போன்ற பெறுமதிமிக்க பொறுப்புகளை இலங்கை பொலிஸ் துறைக்காக அவர் சிறப்பான சேவைகளையும் செய்துள்ளார்.  குற்றங்களைத் தடுப்பதற்காக உலகத்தில் விசேட நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும் பொலிஸ் மோப்ப நாய்களின் கடமையானது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாடு பூராகவும் 54 அலகுகளில் அதிகளவிலான பொலிஸ் மோப்ப நாய்களினூடாக குற்றவியல் விசாரணைகள், போதைப் பொருள் மற்றும் வெடிப்பொருள்களை அடையாளம் காட்டுதல் போன்ற கடமைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குவதில் வெற்றிகளையும் கண்டுள்ளது. இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன்,  1952 ஆம் ஆண்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிநிலை வரை தங்களது சிறப்பான சேவையை செய்து வருகின்றனர். 1979 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகமானது அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சிறந்தமுறையில் நிறைவேற்றி வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் அப்போதைய பொலிஸ்மா அதிபர் சந்திரா பிரனாந்து  அவர்களின் முயற்சியால் குற்றங்கள் நடந்த இடத்தை பரிசோதனை செய்வதற்காக  அதாவது பொலிசாருக்கு கிடைக்கப் பெறும் குற்றங்களை கையாளுவதற்காக குற்றம் நடைபெற்ற இடத்தை பரிசோதனைக்குற்படுத்தும் உத்தியோகத்தர்கள் (SOCO) என்று பெயர் சூட்டி ஸ்வீடன் பொலிசாரால் விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டு இப் பிரிவு  ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியைப் பெற்ற உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் 43 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளில் இணைக்கப்பட்டு குற்றம் இடம்பெற்ற இடத்தினை பரிசோதனைக்குற்படுத்தும் கடமைக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர். பொலிஸ் கல்லூரியினூடாக வழங்கப்படும் பயிற்சிக்கு மேலதிகமாக பொலிசின் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக 1978 ஆம் ஆண்டில் பொலிஸ் உயர் பயிற்சி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அறிவியல் பீடமாகவும் பின்னர் 2011 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் தேசிய பொலிஸ் கல்வியற் கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வியை வழங்கி எதிர்காலத்தில் பொலிசார் பட்டப்படிப்பினை கற்கும் நோக்கத்துடன் பாதையை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.  1983 ஆம் ஆண்டு பொலிஸ் விசேட ஆயுதப் படையாக, பிரித்தானிய SAI உத்தியோகத்தர்களிடம் பயிற்சிகளைப் பெற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையாக இணைந்தது “உறுதியான வெற்றி” என்ற தொணிப்பொருளின் கீழ் ஆகும். பொலிஸ் விசேட அதிரடிப் படை தற்போது திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போதைப் பொருள் சுற்றிவளைப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட படையானது தனது கடமையினை துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றது. 1866 இலிருந்து 2025 வரை 37 பொலிஸ்மா அதிபர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை பொலிஸ் துறை அதன் சட்ட கட்டமைபிற்குள் இருந்தாலும் பொதுமக்களின் சேவையை திறன்பட முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குற்றங்கள், போதைப் பொருள்கள், வீதி விபத்துகள் மற்றும் முறையற்ற ஆட்சிகளுக்கு எதிராக 24 மணித்தியாலங்கள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்காக 86000 பொலிசார் பொலிஸ் விசேட அதிரடிப் படை அடங்களாக  அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். நாடுபூராகவும் பொலிஸ் கடமையை மேற்கொள்வதற்கு 30000 பொலிஸ் உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ளதாக தற்போதைய பொலிஸ்மா அதிபர் அவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 608 பொலிஸ் நிலையங்களும், 45 பிரதேச பொலிஸ் பிரிவுகள் மற்றும் 78 செயல்பாட்டு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றது. மறுசீரமைப்பு செய்யப்பட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் கடமைகள் பொலிஸ் நிருவாகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் புதிய பரிமாணத்தையும் பெற்றுள்ளது.  இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள சில பிரிவுகளினூடாக நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பயணத்தில் குற்றங்கள் மற்றும் ஊழல்களை தடுப்பதற்காகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பயன்படுத்தப்பட்ட நுட்பமான முறைகள் ஊடாகவும் புதிய தொழில் நுட்பங்களுடன் மிகவும் திறமையான பொலிஸ் சேவைகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் முகம் கொடுக்கும் பல்வேறு ஆபத்திலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும் பயம் மற்றும்  சந்தேகத்திற்கு இடமின்றி தனது சொத்துக்களை பாதுகாக்ககூடிய சிறந்த சமூக சூழலை உருவாக்குவதற்காகவும் இலங்கை பொலிசில் புதிய தொழிநுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமாக கைவிரல் அடையாளத்தை பரிசோதிக்கும் முறைகளும் (AFIS), சந்தேகநபர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அடங்கிய (AMIS) முறைமைகளும் அறிமுகப்படுத்தியுள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை தடைசெய்யும் நோக்கத்துடன் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமாநிலைய வளாகத்தில் சந்தேகநபர்களின் முகத்தை அடையாளம் காணும் அமைப்பும் (ARFS) நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் சந்தேகநபர்கள் மாறுவேடங்களில் இந் நாட்டிற்கு வருகைத்தரும் போது அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றனர். பெருந்தெருக்களில் ஏற்படும் வீதி விபத்துகள் மற்றும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும் போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருவதோடு வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் வீதி பாதுகாப்புகள் தொடர்பான நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இத் திட்டங்களுக்கமைய 24 மணித்தியாலங்களும் கொழும்பு நகரில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்களை CCTV தொழில்நுட்பத்தினூடாக கண்காணித்து வருவதுடன், குற்றங்களை

Special Events - TA

தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சகல வசதிகளுடன் புதிய உணவகம்.

தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் சில காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட உணவகம், மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பொறியியல் பிரிவினரால்  குறுகிய காலத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி, பொலிஸ் வெகுமதியிலிருந்து வழங்கப்பட்டது. வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. திலக் C.A. தனபால அவர்களின் அழைப்பின் பேரில் வருகைத்தந்த, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்களால் 2025 செப்டம்பர் 01ஆம் திகதி மாலை வேளையில்  திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வன்னி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சமந்த விஜேசேகர அவர்கள், மன்னார் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு. W.K.A.J. எரிக் ரஞ்சித் அவர்கள், திருகோணமலை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. L.Y.A. சந்திரபால அவர்கள், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு. ஜனக துஷார ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட உணவகம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் தினசரி சேவைகளை மேலும் செயற்பாடானவையாக மாற்றவும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Special Events - TA

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வங்காலை ‘‘சன்செட்’’ விடுமுறை விடுதி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக, வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “சன்செட்” விடுமுறை விடுதி, 2025.09.01 ஆம் திகதி மாலை, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் கரங்களால் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இவ்விடுதி, மன்னார் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பொறியியலாளர் பிரிவின் உத்தியோகத்தர்களின் பங்களிப்பின் கீழ், முழுமையாக நிர்மாணிக்கப்பட்டது. இதற்கான நிதி உதவி, அந்த பிரிவிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டது. விடுதி திறப்பு நிகழ்வில் பங்கேற்ற  வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு திலக்.சி.ஏ. தனபால, வன்னி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜேசேகர, மன்னார் பிரிவிற்கும் (கடமை மேற்கொள்ளும்) திருக்கோணமலை பொலிஸ் பிரிவிற்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ. சந்திரபால அவர்கள் மற்றும்  வங்காலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கெலும் தர்ஷன செனவிரத்ன ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்விடுதி, பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன் மற்றும் ஓய்வூட்டும் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

Special Events - TA

அநுராதபுரம் புனித பூமிக்கு பொலிஸ் கொடியை ஏந்திச் சென்றார் பொலிஸ்மா அதிபர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 03 ஆம் திகதி கொண்டாடப்படும் பொலிஸ் தினத்தை முன்னிட்டு, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மதிப்பிற்குரிய பௌத்த தேரர்களின் வழிநடத்தலின் கீழ், பொலிஸ் கொடியையும் பொலிஸ் பிரிவுகளின் கொடியையும் ஶ்ரீ மஹா போதியின் புனித வெள்ளரசு மரத்தின் கீழ் வைக்க, அநுராதபுரம் புனித பூமியை சென்றடைந்தனர். இதன் மூலம் இலங்கை பொலிசுக்கும் நாட்டுக்கும் ஆசிர்வாதம் பெறப்பட்டது. இந்த நிகழ்வில், 2025 செப்டெம்பர் 01 ஆம் திகதி, பணிகளை சிறப்பாக செய்த பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரிகள் புனித ருவான்வெலிசேய மற்றும் ஶ்ரீ மகா போதி புனித பூமியில் மத வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Special Events - TA

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 41வது நினைவுத் தினம்

நாட்டின் நலனுக்காக உயிர்த் தியாகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக, விசேட அதிரடிப் படையின் 41வது வீரர்கள் நினைவுத் தின நிகழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன அவர்களின் தலைமையில், 2025 செப்டெம்பர் 01ஆம் திகதி, களுத்துறை கட்டுக்குறுந்து விசேட அதிரடிப் படை பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களும் பங்கேற்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 464 வீரர்கள் மற்றும் 6 சிவில் அதிகாரிகள் தாய்நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழந்துள்ளனர்.  மேலும், யுத்தத்தின் போது காயமடைந்த 774 வீரர்கள் முழுமையாக அங்கவீனமடைந்துள்ளனர். 1984 செப்டெம்பர் 01ஆம் திகதி, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பிரதேசத்திற்கிடையில் வாகனத்தில் பயணித்த போது, எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்புகளால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் மோதியதால், விசேட அதிரடிப் படையின் நான்கு உறுப்பினர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்கள்: • சாஜர்ன்ட் ஆர். சந்திரசேன • பீ.ஏ. ஏக்கநாயக • எல்.டி. நானயகார • சாஜர்ன்ட் சாரதி எச்.டி. சுமனசேகர இச் சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த மேலும் 11 உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர். இந்த துயரச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி வீரர் தினமாக நினைவுகூரப்படுகிறது. இவ்வருடமும், வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை இணைத்து, கௌரவத்துடன் நினைவு கூறும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.ஜீ. சமந்த த சில்வா உட்பட சிரேஷ்ட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். மேலும், பயிற்சி மற்றும் உயர் பயிற்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களும், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

Special Events - TA

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட ஐந்து முக்கிய சந்தேக நபர்களை இந் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் வெளிநாடொன்றில் ஒரே நேரத்தில் மிக முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதற்காக இலங்கை பொலிசார் சர்வதேச பொலிஸ் உதவியுடன் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.  இதன் போது இந்தோநேசியா நாட்டிற்குத் தப்பிச் சென்று மறைந்திருந்த சந்தேகநபர்களை 2025.08.27 ஆம் திகதியன்று இலங்கை பொலிசார் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.  இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், பானந்துறே நிலந்த மற்றும் தெம்பிலி லஹிரு  போன்ற புனைப்பெயர்களால் அறியப்படும் சந்தேக நபர்களை 30.08.2025 ஆம் திகதி இரவு, விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். சுற்றிவளைப்புகளின் ஆரம்பம் முதல் இறுதி வரை தீவிரமாக செயல்பட்டு மன உறுதியுடன் கடமையை மேற் கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு இறுதிவரை உறுதியான ஆதரவை வழங்கியது மாத்திரமின்றி சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக இந் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு உதவிப் புரிந்த இந்தோநேசியா பொலிஸ் உத்தியோகத்தர்களையும் வரவேற்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களும், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களும் விமானம் தரை இறங்கும் வரை விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தனர்.  பொலிஸ்மா அதிபர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் சந்தேக நபர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், தீவர பாதுகாப்பிற்கு மத்தியில் அவர்களை விசாரணை பிரிவுகளுக்கு ஒப்படைக்கும் வரை தடுத்துவைப்பதற்கு கட்டளையிட்டது மாத்திரமின்றி  அவர்களுக்கு சட்டரீதியான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். 

Special Events - TA

ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃகிராஞ்ச், பொலிஸ்மா அதிபரை சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃகிராஞ்ச் அவர்கள், பொலிஸ்மா அதிபருக்குமிடையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று 28 ஆகஸ்ட 2025 அன்று மாலை இடம்பெற்றது.  இலங்கை பொலிஸ் மற்றும் ஜக்கிய நாடுகள் சபைகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கடமைகளின் வசதிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

Special Events - TA

பொலிஸ்மா அதிபர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பகல், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை பொரளையில்  அமைந்துள்ள கொழும்பு பேராயர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து, சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  இச் சந்திப்பின் போது குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர அவர்களும் கலந்துகொண்டார்.  சந்திப்பின் இறுதியில், பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பொலிஸ்மா அதிபர் அவர்களை ஆசிர்வாதம் வழங்கி, வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இச் சந்திப்பு நினைவு கூறும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களால், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 

Special Events - TA

பொலிஸ்மா அதிபர் மற்றும் விமானப் படைத் தளபதிக்கிடையிலான சந்திப்பு

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக 2025.08.25 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை சந்தித்தார்.  ஶ்ரீ ஜயவர்த்தனபுர விமானப் படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் புத்திக பியசிறி அவர்களால் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது, மேலும், இலக்கம் 43 வண்ணப் பிரிவினரால் மரியாதை அணிவகுப்பு  வழங்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கிடையில் நட்புரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது விமானப்படைத் தளபதி பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இச் சந்திப்பின் நினைவாக இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். 

Scroll to Top