Special Events – TA – Page 6 – SRI LANKA POLICE

Special Events – TA

Special Events - TA

சப்ரகமுவ மாகாணத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களுடன் பொலிஸ்மா அதிபர் இரத்தினபுரிக்கு வருகை.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் வைபவமானது பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 19.07.2025 ஆந் திகதி மாலை வேளையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கு அடையாளம் காணப்பட்ட 34 பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸ்மா அதிபர் அவர்களால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் தனது சிறப்பான சேவைகள் மூலம் நாட்டின் ஒழுங்கை பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணிக்கும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைகளையும் பாராட்டியதுடன், அவர்களின் நலன்புரிகளுக்காக செயல்படுத்தப்படும் எதிகாலத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கினார். இந் நிகழ்வுக்காக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குனரத்ன அவர்களும், இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள மஹகிரில்ல அவர்கள், இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸ அவர்கள் மற்றும் மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். 

Special Events - TA

ஓபநாயக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் அலகுக்கு புதிய கட்டடம்.

இரத்தினபுரி பிரிவின் ஓபநாயக பொலிஸ் நிலைய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் கட்டடம் சகல வசதிகளுடன் 20.05.2025 ஆந் திகதி மாலை வேளையில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குனதிலக அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்டுகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்கள் முகம் கொடுக்கும் குற்றங்கள் தொடர்பாகவும், அவர்களின் தனியுரிமைகள் பாதுகாக்கும் வகையில் முறைப்பாடுகளை செய்வதற்கான முறையான சூழலை உருவாக்குவதற்கும், அவர்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கும், பொலிசார் கடமையாற்றுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும்  இவ்வாறு நவீன வசதிகளுடன் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தை ஸ்தாபிக்கப்படுவதற்கான நோக்கமாகும். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் இத் திட்டமானது நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இக்கட்டடமானது இவ்வாறு கட்டப்பட்ட ஒரு கட்டடமாகும். இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுல மஹகிரில்ல அவர்களும், இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கப்பில பிரேமதாச அவர்களும் உயர் அதிகாரிகளும் இதன் போது கலந்துகொண்டனர்.

Scroll to Top