தொலை நோக்கு
வீதி விபத்துகளும் போக்குவரத்து நெரிசலற்ற, பாதுகாப்பான வீதிகளை உருவாக்கல்.
செயற்பணி
அனைவரும் பாதுகாப்பாக வீதிகளில் பயணம் செய்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்காகும், வீதி விபத்துகளுக்கான புள்ளிவிபரங்களை சேகரித்து, அதன்படி போக்குவரத்து சட்டங்களை வடிவமைத்தல், தொடர்புடைய நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து நடவடிக்கை எடுக்குதல் மற்றும் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல், பாடசாலை மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீதி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இதனூடாக நாட்டெங்கிலும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
வரலாறு மற்றும் தற்போதைய முன்னேற்றமும்.
இலங்கையில் முதன் முதலில் 1899 டிசம்பர் 01 ஆம் திகதியன்று ட்டெம்ப் கார் (எரிபொருள் இயங்கும் வாகனம்) பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து 1899 டிசம்பர் 14 அன்று அஞ்சல் வேன் இறக்குமதி செய்யப்பட்டு தபால் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. 1902 ஆம் ஆண்டு முதன் முறையாக காரும், 1906 ஆம் ஆண்டு பேருந்தும் இந் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்தன் பின்னர், போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளின் அவசியம் ஏற்பட்ட காரணத்தினால்.
மேலும், 1917 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனம் பதிவுச் செய்யப்படும் அலுவலகமொன்றை ஸ்தாபித்து மோட்டார் வாகனப் பதிவுகளை மேற்கொண்டு வந்தனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுகளின் பொறுப்புகள்.
1953 நவம்பர் 11 ஆம் திகதி 5202 இலக்க பொலிஸ் வர்த்தமானி 11 இன் படி ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுகளின் கடமைகளும் அதன் செயற்பாடுகளும்.
மேற்கண்ட, விடயங்களை செயற்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுகளில் நிருவாகப் பிரிவு, கல்விப் பிரிவு, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவு, பொறியியலாளர் அலுவல்கள், புள்ளிவிபரவியல் மற்றும் வீதி விபத்து தரவுகளை பகுப்பாய்வு நிலையம், ஊக்குவிப்பு பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளின் கடமைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.