பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை பொலிசாருக்கு இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வானது 07.08.2025 ஆந் திகதியன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு. சிந்தக மென்டிஸ் அவர்களும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்களும் உத்தியோகப்பூர்வமாக கையொப்பமிட்டனர்.