பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பகல், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை பொரளையில் அமைந்துள்ள கொழும்பு பேராயர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து, சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச் சந்திப்பின் போது குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர அவர்களும் கலந்துகொண்டார்.
சந்திப்பின் இறுதியில், பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பொலிஸ்மா அதிபர் அவர்களை ஆசிர்வாதம் வழங்கி, வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இச் சந்திப்பு நினைவு கூறும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களால், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.